இதெல்லாம் ஒரு ப்ளாக்குன்னு வந்து படிச்சிக்கிட்டு..... போய் வேற நல்ல ப்ளாக்கு இருந்தா படிங்க தம்பி

Wednesday, August 29, 2012

பதிவர் சந்திப்பு -மறைக்கப்படாத உண்மைகள்


பதிவர் சந்திப்பிற்கு நானும் போகனும்னு ஆரம்பத்துலயே ப்ளான் பண்ணிட்டேன்.  போனா எப்படியும் ஒருவேள சாப்பாடாவது கெடைக்கும்ல? நமக்கு வேற என்ன சார் வேணும்? டெய்லி நாமளே சமைச்சு, சாப்பிட்டு, பாத்திரம் கழுவி......... என்னத்த கண்டோம். அட்லீஸ்ட் ஒரு நாளாவது எந்த வேலையும் பார்க்காம நிம்மதியா நல்ல சாப்பாடு சாப்பிடலாம்ல!

இப்படி ஒரு நல்லெண்ணத்துல இருந்தப்போ பதிவர் சந்திப்பு அமைப்பாளர்கள்கிட்ட இருந்து திடீர்னு ஒரு அறிவிப்பு. நான் வெஜ் இல்லியாம், ஒன்லி வெஜ்தான் போடுவாங்களாம். அடடடா வட போச்சேன்னு நானும் கதிகலங்கி போயிட்டேன். பின்ன என்னங்க, வீட்லதான் சைவமா சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு பூரா செத்து போச்சு. வெளில போய் திருட்டுத்தனமா நான் வெஜ் சாப்பிட்டு வந்தாலும் எப்படியோ கண்டுபிடிச்சு தொரத்திடுறாங்க.  அப்புறம் நைட்டு பூரா ஆபீஸ்ல தங்க வேண்டியதா போய்டுது. இப்படி நான் வெஜ் சாப்பிட வழியே இல்லாம இருக்கைல வந்த ஒரு வாய்ப்பும் போச்சே?

இப்போ என்ன செய்யலாம், எப்படி இதை சமாளிக்கலாம்னு டெய்லி யோசிச்சேன், நின்னுக்கிட்டு யோசிச்சேன், ஓடிக்கிட்டு யோசிச்சேன், படுத்துக்கிட்டு யோசிச்சேன்.... பின்னே, வெஜ்ஜுன்றதுக்காக ஒரு ஓசி சாப்பாட்டை விட்டுட மு்டியுங்களா, நீங்களே சொல்லுங்க? அப்பதான் அந்த ப்ளான் சிக்குனுச்சு. உடனே பதிவர் சந்திப்புக்கு பேர் கொடுத்துட்டேன். அன்னில இருந்து வெறும் கஞ்சிதான். ஒரு கப் கஞ்சி, மூனு கப் தண்ணின்னு நல்லா ப்ராக்டீஸ் பண்ணி வயித்த ரெடி பண்ணிட்டேன்.

சந்திப்பு அன்னிக்கு வீட்ல காலைலயே சொல்லிட்டு கெளம்பிட்டேன். கெளம்பி நேரா அஞ்சப்பர் ஹோட்டல் போனேன். அங்க ஒரு பிரண்டை ஏற்கனவே வர சொல்லி இருந்தேன். ரெண்டு பேரும் நல்லா பிரியாணி, காடை ப்ரை, சிக்கன் 65, தந்தூரின்னு செம கட்டு. வழக்கம் போல பில் வந்ததும் நான் வாஷ் பேசின் பக்கமா ஒதுங்கினேன். பிரண்டு கேவலமா திட்டிக்கிட்டே பில்லுக்கு காசு கொடுத்தான். அப்புறம் அவன்கிட்ட வேற ஒரு வேலை இருக்குன்னு கெளம்பி நேரா பதிவர் சந்திப்பு நடக்கும் மண்டபத்துக்கு போயிட்டேன்.

அங்க போனா சாப்பாடு இன்னும் ஆரம்பிக்கல, அதனால பக்கத்து சந்துக்குள்ள இருந்த ஒரு பொட்டிக்கடைல சோடா வாங்கி அடிச்சிக்கிட்டே நோட்டம் விட்டுட்டு இருந்தேன். சாப்பாடு போட ஆரம்பிச்சுட்டாங்கன்னு தெரிஞ்சதும் அப்பதான் வர்ர மாதிரி வேக வேகமா உள்ள வந்தேன். எல்லாரும் வாங்க சாப்பிட போகலாம்னு கூப்பிட்டாங்க. நான் இல்ல வீட்ல சாப்பிட்டேன் வேணாம்னு சொல்லிட்டேன். அப்போ நான் ஏற்கனவே செட் பண்ணி வெச்சிருந்த மாதிரியே சில பதிவர்கள் வந்து பரவால்ல சும்மா எங்ககூட வந்து கம்பெனி கொடுங்கன்னு சொன்னாங்க.



அதுக்கு மேல விடுவேனா நான்? (விட்டா அப்புறம் உண்மையிலேயே சாப்பிட முடியாம போயிடுச்சுன்னா?) உடனே பந்தில உக்காந்து தூர்வாரிட்டேன். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சோடா குடிச்சிருந்தது நல்லா ஒர்க் அவுட் ஆகுனுச்சு. ஒரு ஏப்பத்த ரிலீஸ் பண்ணிட்டு செமயா பிரிச்சு மேய்ஞ்சுட்டேன். அந்த பக்கமா வந்த ஒருத்தர் வந்து பார்த்துட்டு இன்னும் நிறைய பேர் சாப்பிட வேண்டி இருக்கேனு கவலையா சொல்லிட்டு போனார். அதையெல்லாம் பார்த்தா முடியுமா?


போலி டிஸ்கி: நைட் சாப்பாட்டுக்கும் சேர்த்து நான் பார்சல் கட்டி கொண்டது யாருக்கும் தெரிய கூடாது என்று இங்கே நான் அதை பற்றி சொல்லவில்லை

ஒரிஜினல் டிஸ்கி: பார்சல் கொஞ்சம் அதிகமாவே கட்டிட்டு வந்துட்டதால இன்னும் அதுதான் ஒடிட்டு இருக்கு.

நன்றி:
போட்டோ கமெண்ட்ஸ்:  பன்னிக்குட்டி ராம்சாமி

Monday, June 11, 2012

இன்னுமாடா சங்கத்த கலைக்கல?

ஹலோ இன்னிக்கு அதிகாரி ரொம்ப கோவமா இருக்கேன், பாத்து நிதானமா படிங்க, படிச்சுட்டு சூதானாம இருங்க. ஓகே..?


கடவுள் படச்சதுல மிக அற்பு(த)மான விஷயம் பிரபல பதிவர்கள். (பதிவு எழுதுற எல்லாருமே பிரபலம்தான்) எதுவுமே தெரியாம எல்லாம் தெரிஞ்ச மாதிரி நடிக்கிறதுனா சும்மாவா? காலையில எழுந்து பொண்டாட்டி கிட்ட திட்டு வாங்கரது. அதே கோவத்துல வண்டில ஏறி உக்கார்றது.வர வழி எல்லாம் ஆபிஸ்ல இன்னிக்கு எப்படி வேலை செய்யாம ஓப்பி அடிக்கலாம்னு யோசிக்கிறது.


உள்ள வந்ததும் ஒரு புத்திசாலி(?) மேனேஜர் ஒரு வேலை கொடுப்பாரு. அதை செய்ய ஆரம்பிக்கிறதுகுள்ள அரைமணி நேரம் டீ பிரேக் போயிடுவாங்க. அடுத்த அரை மணி நேரம் சிகரெட் பிடிக்க கிளம்பிடுவாங்க. சரி சீட்டுக்கு போங்க அப்டின்னு மேனேஜர் சொல்லுவாரு.


அடுத்த அஞ்சி நிமிஷத்துல(அவங்க சீட்டுக்கு வந்து உக்காரும்போதே ரெண்டு மணி நேரம் முடிஞ்சிருக்கும்)ஏங்க அந்த வேலை முடிஞ்சிதா அப்டின்னு மேனேஜர் கேட்பாரு. அப்போ கேனத்தனமா சிரிப்பாங்க பாருங்க அப்போ வரும் கோவம்... ஏண்டா நாயே நீ எல்லம் உயிரோட இருந்து என்னடா பண்ற அப்படினு கேக்கனும் போல நாக்குல வார்த்தை வந்து நாட்டியமாடும்(சீட்டுல வந்தும் வேலை செய்யாம பதிவுகளுக்கு ஓட்டு போடுறது, கமெண்ட்டு போடுறதுன்னு ரெண்டு மணி நேரம் போயிடும்).


அப்புறம் இந்த பதிவு போடுறது இருக்கே, அதவிட கஷ்டமான வேலை எதுவுமே கிடையாது. ஓலபொட்டில ஒண்ணுக்கடிச்ச மாதிரி பதிவு ஒன்ன போட்டுட்டு அதுக்கு கொடுப்பானுங்க பாருங்க லிங்கு. ஃபேஸ்புக், ட்விட்டர், ப்ளாக் கமெண்ட்ஸ், ஈமெயில், கூகிள் ப்ளஸ்னு எந்த பக்கம் போனலும் விடாம சுத்தி வளச்சு லிங்க போட்டு பதிவுக்கு கூட்டம் சேர்த்துட்டு போவானுங்க.கூட்டம் சேர்க்க இன்னொரு ஐடியாவும் இருக்கு. காலைல்ல ஆபீஸ்ல வந்து உக்காந்த உடனே வதவதவதன்னு மாடு சாணி போட்ட மாதிரி எல்லா ப்ளாகுகளுக்கும் போய் அருமை, சூப்பர் பதிவுன்னு கமெண்ட்ட போட்டு வெச்சிட்டோம்னா, அதுல பாதியாவது ரிட்டன் வரும். அத வெச்சு அன்னிக்கு பொழப்ப ஓட்டிடலாம். கமெண்ட்ஸ் மட்டும் போதாது, ஓட்டும் போடனும். நீங்கத்தான் போட்டீங்கன்னு யாரு கிளிக் பண்ணி பாக்க போறா, அதுனால அதையும் காமெண்ட்ல சொல்லிட்டோம்னா சோலி முடிஞ்சது. ரிட்டன் ஓட்டு கன்பர்ம்.

ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு போயாவது சும்மா இருப்பாங்கன்னா அதான் கெடையாது. வீட்ல போய் லேப்டாப்ப தூக்கிட்டு உக்காந்துட்டு நொச்சு நொச்சுன்னு எல்லா கமெண்ட்டுக்கும் பதில் சொல்றது, விட்டுபோன பதிவுகளுக்கு கமெண்ட்டு ஓட்டு போடுறது, அன்னிக்கு வந்த ஹிட்ஸ் பத்தலேன்னா இன்னும் ரெண்டு பதிவ போடுறதுன்னு வீட்ல இருக்கவங்க உயிர எடுப்பானுங்க.  பக்கத்துல இருக்க சொந்தக்காரன்கிட்ட மூஞ்சி கொடுத்து பேசமாட்டான். எங்கயோ இருக்க பதிவர் எழுதுன வெட்டி பதிவ பாராட்டி ஆஹா அருமைனு ஸ்மைலி போடுவான்.

உலக சினிமா பதிவு எழுதுறவங்க இருக்காங்களே, அவனுங்க பண்ற லந்து இருக்கெ? அவங்களுக்கு தெரிஞ்சது எல்லாம் ஏதாவது வாயில நுழையாத ஒரு இங்கிலீஷ் படம் பேர சொல்ரது, அதுக்கு விமர்சனம்னு என்னத்தையாவது வாந்தி எடுக்கறது, (அதுவும் சிலரு தமிழ் சினிமா பார்க்க மாட்டானுகலாம். ஒன்லி இங்கிலீஷ் படம்தான்) அந்த ஹீரோயின் எவ்ளோ அழகா இருக்கா தெரியுமான்னு கேட்டு நம்ம உயிர வாங்கரது. அந்த லூசு பிகரு எப்படி இருந்தா எனக்கு என்ன?

அப்படி என்னடா அந்த நடிகை நடிச்சிருக்கான்னு கேட்டா, வித்தியாசமா நடிச்சிருக்காங்க அப்டின்னு சொல்லுவாங்க. இது நம்ம ஊர்ல இருக்க சாதரண நடிகை கூட வித்தியாசமாத்தான் நடிக்கிறாங்க. அதே மாதிரி வர்ற தமிழ் படத்தை விட்டுட்டு இங்கிலீஷ் படத்தை சத்யம் தியேட்டர்ல Rs.200 கொடுத்து பார்த்துட்டு வந்து வெட்டியா சீன் போடுவானுக. இது உண்மைல சத்யம் தியேட்டர்ல அரையும் குறையுமா வர்ர பிகர்களை வேடிக்க பாக்க போயிருக்கும் ஆனா நம்மகிட்ட என்னமோ அந்த படத்தையே இவர கேட்டுதான் எடுத்த மாதிரி பில்டப் கொடுக்கும்.


இப்படி எப்பவுமே வெட்டியா இருந்துட்டு பதிவர்கள் மீட்டிங்னு வந்த உடனே அங்க போய்  செல்போன்ல எவன்கிட்டயாவது வெட்டியா எதாவது பேசும். "போன வாரம் ஏன் நீ பீச்சுக்கு வரலை?இந்த வாரம் படத்துக்கு போகலாம். சாரிடா செல்லம்." ஏண்டா காலைல இருந்து ஒரு வேலை பார்க்கலை அப்டின்னு வெறும் போன்ல வெட்டி சீன் போடுவானுக.

இந்த திரட்டிகள் அப்படின்ற விஷயத்த எந்த மகான் கண்டு பிடிச்சாரு தெரியவில்லை. அவரு பாவம் நல்ல தரமான பதிவுகள் போடுறவங்கள ஊக்குவிக்கனும்னு நினைச்சு ஆரம்பிச்சிருப்பாரு.  ஆன இந்த பன்னாடைங்க அதை அப்படியே திருப்பி விட்டுட்டானுங்க. அவங்க ஏதாச்சும் மிரட்டி கேட்டாங்கன்னா, சார் டீ சாப்டீங்களா. காப்பி சாப்டீங்களா. சிகரெட் வேணுமான்னு வழிய வேண்டியது. இந்த பயம் எல்லாம் இவ்ளோ நாள் எங்கடா போச்சு. இவனுங்களால எந்த திரட்டியவாவது ஓப்பன் பண்ணி நிம்மதியா படிக்க முடியுதா?   நமீதா டவுசர காணோம், குஷ்புவ கிள்ளுனது யாரு, கலா மாஸ்டர் ஆடுனத பாருன்னு போட்டு தாளிக்கிறானுங்க, ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸபா.....





டிஸ்கி : நானும் கேட்கிறேன், இது எல்லாம் ஒரு பொழப்பா. இப்படி எல்லாம் பதிவு போடலைனு யார் அழுதா? ஆபீஸ் வர வேண்டியது. கண்டமேனிக்கு பதிவு போட்டு பொழுத போக்க வேண்டியது. ஏன்டா வேலை செய்யலைன்னு மேனேஜர் கேட்டா அவனை திட்ட வேண்டியது

ஒரிஜினல் டிஸ்கி : சில நல்ல திறமையுள்ள பதிவர்கள் இருக்கலாம்(என்ன இருக்கலாம் சிலரை தவிர எல்லோரும் திறமையானவர்கள்தான்) அவர்களுக்கு திட்டு விலக்கு அறிவிக்க படுகிறது...

Monday, May 28, 2012

சிங்கம் ஒன்று புறப்பட்டதே...

சிங்கம் ஒன்று புறப்பட்டதே...
இன்று இரவு இங்கிருந்து கிளம்பி நாளை காலை சேலம் செல்கிறேன். மறுபடியும் நாளை இரவுதான் அங்கிருந்து திரும்புகிறேன். என்னை பார்க்க, பழக, சாப்பாடு வாங்கி தர, என்னிடம் ஆட்டோகிராஃப் வாங்க விருப்பமுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும். என் நம்பர்:  1800-அவ்வ்வ்வ்-1100 (முழுக்க முழுக்க டோல் ஃப்ரீ இலவச சேவை).

சேலம் சித்த வைத்தியரிடம் ட்ரீட்மெண்ட் எடுப்பதற்காக அடிக்கடி அங்கே செல்வது வழக்கம். (இதுக்காக டிப்பார்ட்மெண்ட்ல பெசல் ஆர்டரே வாங்கி வச்சிருக்கேன்). ஒவ்வொரு முறையும் சேலம் செல்லும் போது வெறும் வைத்தியத்தோடு முடிந்துவிடும். ஆனா இந்த முறை கொஞ்சம் லேகியம் (மான் கொம்பு லேகியம்) வாங்கி வந்து அனைவருக்கும் விற்கலாம் என்ற நல்ல எண்ணத்தில் இருக்கிறேன். உங்கள் அனைவரின் மேலான ஆதரவை எதிர்நோக்கி உள்ளேன். எல்லாரும் வாங்கி பயன்படுத்தி சந்தோசமா இருக்கனும். என்ன நான் சொல்றது? என்னைய மாதிரி ஒரு உயர் அதிகாரி சொல்றதால எல்லாரும் நம்பி வாங்குவீங்கன்னு நினைக்கிறேன்.


இது சேலம் சித்த வைத்தியர் அவர்களுக்கு:
ஐய்யா, அழுதாலும் புரண்டாலும் கண்ணீர் விட்டு கதறினாலும் சரி நாளை மதிய சாப்பாடு உங்களோடதுதான். அதுனால நல்ல வெடக்கோழியா பாத்து புடிச்சு ரெடி பண்ணி வைக்கவும். தலைமறைவாக முயற்சி செய்தால் பின்னர் கடும் விளைவுகளை சந்திக்க நேரும் என என் சார்பில் எச்சரிக்கை செய்கிறேன். என்னை வரவேற்று பேனர் எதுவும் கட்டவேண்டாம். ப்ளீஸ். அப்புறம் இந்த வாட்டி எனக்கு இரண்டு லாரி லோடு அளவுக்கு லேகியம் தேவைப்படுது. போனதடவை மாதிரி லேகியத்த மாத்தி கொடுத்துடாம கரெக்டா அந்த மான் கொம்பு லேகியத்த எடுத்து வைங்க. நான் வந்து அப்படியே எடுத்துகிறேன்.

மற்ற நண்பர்களுக்கு:
சேலம் சித்த வைத்தியரிடம் பெசல் லேகியம் வேண்டும் வாலிப வயோதிக நண்பர்கள் வரிசையாக வந்து பெயர் குடுக்கவும்.

ஹலோ.. வரிசையில வாங்க. ம்ம்.. வந்து பேரை சொல்லிட்டு பணத்த குடுங்க..

அட சண்டை போடாம வரிசையா வந்து லைன்ல நில்லுங்க பக்கிகளா...

ம்ம்.. அடுத்தது யாருப்பா.. சீக்கிரம்..டிரைனுக்கு நேரமாச்சுல்ல.... அங்க வைத்தியரு லேகியத்தோட வெயிட் பண்ணிட்டு இருப்பாரு, சொல்லிட்டு கரெக்டா போகல்லேன்னா கெட்ட வார்த்தைல திட்டுவாரு.......


லேகியத்த தின்னுட்டு ஸ்டெடியா வரனும்... என்ன?

Monday, April 30, 2012

மிகச் சிறந்த சிந்தனையாளன்


கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஊருக்கு போயிருக்கும்போது ஃப்ரெண்டு ஒருத்தன், ஒரு லேகிய வைத்தியரை பார்க்க சேலம் வரை போகணும் உனக்குத்தானே அவரை நல்லா தெரியும் கூட வா அப்படின்னு கூப்பிட்டன். சரி வெட்டியாத்தான இருக்கோம் அப்டின்னு அவன் கூட போனேன். சேலம் பஸ் நிலையத்தில் இருந்து அந்த வைத்தியர் இடம் வரை போகணும்.

ஊர்ல இருக்கும்போது ஏற்கனவே நிறைய தடவை அங்க போயிருக்கேன். அதனால் எனக்கு அந்த இடம் தெரியும். அங்க போற பஸ் ஏறினோம். சரியான கூட்டம். எல்லாம் கிழவனுங்க கூட்டம். அவனுங்களும் அங்கதான் போறானுங்க போலன்னு நெனச்சிகிட்டேன். அப்புறம் ஒரு ஸ்டாப்பில்  கூட்டம் குறைந்தது பின் சீட்டில் ஃப்ரெண்டும் அதற்ககு முந்தைய சீட்டில் நானும் உக்கார்ந்தோம்.


ரோட் சைடுல ஏதோ பிட்டுப்பட விளம்பரத்துன "ஷக்கீலா" சிரிச்சிக்கிட்டு இருந்தாங்க. அவங்களை ரசிச்சிக்கிட்டே (ஜொள்ளு விட்டுகிட்டேன்னு சொல்லு) இறங்குற இடத்தை மறந்துட்டேன் (ஹிஹி). ஃப்ரெண்டு இறங்கும்போது சிப்பு சிப்பு னு கூப்பிட்டிருக்கான்.




ஆனா நான் ஷக்கீலா போட்டோ பாக்குறதுல ரொம்ப பிஸி. அதனால அவன் கூப்பிட்டதை கவனிக்கலை. பஸ்ல உள்ள ரெண்டு பேர் கூட யாருப்பா சிப்பு சிப்புன்னு கேட்டிருக்காங்க. நான் அதை கண்டுக்கவே இல்லை. அதுக்கப்புறம் ஃப்ரெண்டு கீழ இறங்கி போன் பண்ணி சொன்ன  பிறகுதான் கவனிச்சேன் (ஹிஹி).

அதுக்கப்புறம் ரன்னிங்ல  இறங்க போகும்போது ஒருத்தர் கேட்டார் "நீங்கதான் சிப்பா"?  நான் ஆமான்னு சொன்னேன். அதுக்கு அந்த பெரியவர் எனக்கு கொடுத்த பட்டம் "நீ மிகப்பெரிய சிந்தனையாளன்" . இவ்ளோ பேர் கூப்பிட்டும் கவனிக்கலைன்னா ஏதோ ஒரு பெரிய(?) விஷயம் பத்தி சிந்திச்சிருக்க. "கீப் இட் அப் (?)" அப்டின்னு சொன்னார். இப்போ ஜொள்ளுங்க சீ சொல்லுங்க நான்  மிகச் சிறந்த சிந்தனையாளன் தானே? ஷக்கீலாவால நான் ஒரு சிந்தனையாளன் ஆகிட்டேன். தேங்க்ஸ் ஷக்கீலா... அண்ட் தேங்க்ஸ் பிட்டுபடம்
ஒரிஜினல் : மிகச் சிறந்த சிந்தனையாளன்

Wednesday, April 18, 2012

உஷாரா இருக்கணும்!!!

பிறந்தோம் வளர்ந்தோம்னு இருந்து என்ன பிரயோஜனம். வாழும் வாழ்க்கைல நாலு பேருக்கு கெட்டது பண்ணணும்ல (என்னது என் பிளாக் படிக்கசொல்ல போறேனா....? நோ நெவெர், கொலகேஸ்ல உள்ள போக நான் தயார் இல்ல......). அதான் மக்களுக்கு சில பயனுள்ள தகவல்கள் சொல்லி அவங்களை உஷார் படுத்தலாம் அப்டின்னு இந்த பதிவை எழுதுறேன். ஏதோ என்னால முடிஞ்சது.

உடம்பு நல்லா இருந்தா --உடனே போய் டாக்டர் விஜய் படம் பார்க்கனும்

ஆம்புலன்சுக்கு 108க்கு போன் பண்ணவும் - (+91*****க்கு தவறாக போன் செய்து நாய்நக்சிடம் மாட்டிக்கொண்டால் நிர்வாகம் பொறுப்பேற்காது)

சாமி கும்பிட - கோவிலுக்கு போகணும் (நோ நோ இன்னிக்கு நான் ரொம்ப பிஸி. தேங்கா பொறுக்கித்தர மாட்டேன்)

துணி எடுக்க - நல்ல ஜவுளிக்கடை போகணும் (என்னைய மாதிரி அடுத்தவன் வீட்டு கொடில எடுக்க கூடாது) 

படம் பார்க்க - சினிமா தியேட்டர் போகணும் (விருதகிரி பாருங்க. மேதை பாருங்க, சும்மா ஒரு விளம்பரம். ஹிஹி)

நல்ல பதிவுகள் படிக்க - என்ன யோசனை. யோசிக்காம என் பிளாக் வாங்க (யோசிச்சா வர முடியாதில்ல. இல்லன்னா டெரர்பாண்டியன் கள்ளிக்காட்டு இதிகாசம்-Season 3 எழுதுறாரு. அதை படிங்க)

வீட்டுல களவு போனா - போலீஸ் ஸ்டேஷன் போகணும் (என்னை மாதிரி சிரிப்பு போலீஸ் இருக்குற போலீஸ் ஸ்டேஷன் போகணும், அப்போதான் உங்களுக்கு களவு போன சோகமெல்லாம் பறந்து போயிடும்)

கரண்ட் இல்லைன்னா - EB Office க்கு போன் பண்ணனும் (என்னைய மாதிரி நீங்களே ட்யூப்லைட்டா இருந்தா அதுவும் தேவை இல்லை)

டிஸ்கி 1: தலைப்பில் உள்ளது போல "உஷாரா இருக்கணும்". உஷாவோட இருக்கணும்னு தப்பா புரிஞ்சிகிட்டு ட்ரை பண்ணி என்னைய மாதிரி அடி வாங்கிடாதீங்க அப்புறம் அதுக்கு நிர்வாகம் பொறுப்பில்லை.


அவனுங்க இந்த மொக்க பதிவ படிச்சு சாகட்டும், நாம அந்த ரூமுக்குள்ள போய் ஒளிஞ்சிக்கலாம் வா....


இதன் ஒரிஜினலை பார்க்க: உஷாரா இருக்கணும்!!!

Tuesday, April 17, 2012

இந்தியாவில் தமிழன் தலைநிமிர வழி என்ன?

பொதுமக்கள் அனைவருக்கும் இந்த ஏட்டு ஏகாம்பரத்தோட (என்கவுண்ட்டர் பெசலிஸ்ட்) பணிவான வணக்கம். ஏதோ காசு கொடுத்து போஸ்டிங் வாங்கி அப்பப்ப, அங்கங்க அஞ்சு பத்துன்னு வாங்குனாலும் எனக்கும் மக்கள் முன்னேற்றத்துல அக்கறை இருக்குன்னு இன்னிக்கு நிரூபிக்க போறேன்.



அதாவது சார், இன்னிக்கு நாட்ல என்ன பிரச்சனை இருக்குன்னா, அந்த பக்கம் காவேரி, இந்த பக்கம் முல்லை பெரியார், இன்னொரு பக்கம் பாலாறு அடுத்த பக்கம் ஈழம். இப்படி திரும்புன பக்கமெல்லாம் தமிழனுக்கு அடி, ஒருபய மதிக்க மாட்டேங்கிறான். அதுக்கு என்ன காரணம் அதை எப்படி சரி பண்றதுன்னு இன்னிக்கு ஒரு தீர்வோட வந்திருக்கேன். அதை கேட்டுட்டு நீங்கள்லாம் அப்படியே ஷாக் ஆகிடுவீங்கன்னா பாருங்களேன்.

நாட்டுல அதிகாரம் வாய்ந்த ஆள் யார்? பிரதமர்தானே? அப்போ அவர் ஆபீஸ்தானே அதிகாரம் வாய்ந்த இடம்? இங்கதான் நீங்க கவனமா இருக்கனும். பிரதமர் ஆபீஸ் எங்க இருக்கு? டெல்லிலதானே? டெல்லி எங்க இருக்கு? இன்னும் டீட்டெயிலா பார்ப்போமா? ஒரு இண்டியா மேப்ப எடுத்து ஓப்பன் பண்ணி வெச்சுக்குங்க சார். அப்புறம் ஒரு அடிஸ்கேல் ஒண்ணு எடுத்துட்டு நான் சொல்றத கவனமா கேளுங்க.

தமிழ்நாட்டோட செண்டர்ல ஸ்கேலோட ஒரு பக்கத்த வெச்சிக்கிட்டு, அப்படியே டெல்லி வரைக்கும் அளந்து பாருங்க. அடேங்கப்பா எவ்வளது தூரம்? இவ்வளவு தூரத்துல அதிகார மையம் இருந்தா நம்மளை எவன் மதிப்பான்? இப்போ புரியுதா சார் என்ன பிரச்சனைன்னு? இனி இதை எப்படி சரி பண்றதுன்னு பார்ப்போம்.





வெயிட் வெயிட்... நீங்கள்லாம் அந்தப்படத்துல வந்த மாதிரி தமிழ்நாட்ட அப்படியே தூக்கி டெல்லி பக்கத்துல வைக்க சொல்ல போறேன்னு தானே நினைக்கிறீங்க? தப்பு, ஒருத்தன் எத்தன தடவ சார் தப்பு பண்ணுவான்? அப்போ ஏதோ சின்ன வயசு, அவசரத்துல தப்பா ஐடியா சொல்லிட்டேன். இனி அப்படி நடக்காது சார். இவ்ளோ சின்ன டெல்லிய தூக்கிட்டு வந்து தமிழ்நாட்டுல வைக்கிறத விட்டுட்டு, இம்மாம்பெரிய தமிழ்நாட்ட தூக்கி டெல்லி பக்கத்துல வைக்க சொல்வேனா?

அதுனால டெல்லிய அப்படியே ரிமூவ் பண்ணி தமிழ்நாட்டுல நல்லா செண்ட்ட்ரான எடமா பாத்து வெச்சிவிடுங்க. வேல முடிஞ்சது. (அப்பிடியே டெல்லிய நகட்டிட்டு வரும்போது நமக்கு பிரச்சனையா இருக்க கர்னாடகாவ லேசா அப்பிடி கடலுக்குள்ள தள்ளி விட்டோம்னா...  அந்த பிராப்ளமும் சால்வ்ட்... எப்பிடி  என் ஐடியா...?) இப்படியே எல்லாரும் அவங்கவங்க மேப்ப எடுத்து மாத்தி முடிச்சிட்டீங்கன்னா, இனி டோட்டல் அதிகாரம் நம்ம கைக்கு வந்திடும்ல? 

பார்த்தீங்களா ஒரு உயர் அதிகாரி, எவ்ளோ பொறுமையா உக்கார்ந்து ஒரு பெரிய தீர்வு ஒன்னு சொல்லி இருக்கேன், அதுனால என்னுடைய இந்த தீர்வு குறித்து ஆன்றோர்கள், சான்றோர்கள், பெரியோர்கள், சபையோர்கள், முன்னோர்கள் அனைவரும் கருத்து கூறுமாறு கேட்டுகொண்டு விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.

Tuesday, April 10, 2012

மலரும் நினைவுகள் -கூவக்கரையோரம்

குவார்ட்டரு உள்ள போயிட்டா அப்புறம் மலரும் நினைவுகளே தானே...?
நான் சின்ன வயசா இருக்கும் போது அடிக்கடி கூவத்துல போய் விளையாடுவேம், ஏன்னா அந்த வாசம்தான் எனக்கு ரெம்ப புடிச்சிருந்துச்சு. எல்லா நேரத்துலேயும் நேரத்துல கூவத்துல அதிகமா தண்ணி ஓடாது. அதுனால ஒவ்வொரு வீட்டுக்கும்(இல்லை ரெண்டு மூணு வீட்டுக்கரங்களுக்கு சேர்த்து) சொந்தமா கூவத்துல இருந்து கால்வாய்  தோண்டி வச்சிருப்பாங்க. அதுல வேற யாராவது தண்ணி எடுத்திட கூடாதுன்னு பழைய பிஞ்ச செருப்ப அங்க போட்டு வச்சிருப்பாங்க. சில நேரம் தண்ணி கடன் கேட்டும் வருவாங்க. மழை நேரத்தில் மட்டும் கூவம் நிறைய தண்ணி ஓடும். கூவம் கரையில நின்னு தண்ணி எடுத்திட்டு வரணும்.

கால்வாயிலும்  தண்ணி இருக்குறது கஷ்டம்தான். அஞ்சு குடம் தண்ணி எடுத்துட்டா அப்புறம் தண்ணி கூவத்துல இருந்து வடிஞ்சி வர்ற   வரைக்கும் காத்திருக்கணும். மாசம் ஒரு தடவை அந்த கால்வாய தூர் வாரணும். அப்பத்தான் தண்ணி நல்லா ஊரும். யாராவது இறங்கி உள்ள இருக்குற சாக்கடைய அள்ளி வெளியில் கொட்டுவாங்க. அப்புறம் அந்த தண்ணியை அப்படியே குடிக்க முடியாது.  பால்டாயில்னு ஒண்ணு இருக்கும். அதை அடுப்புல போட்டு சுட வச்சு நாம பிடிச்சு வச்சிருக்குற தண்ணில கரைக்கணும். அப்போத்தான் தண்ணி குடிக்கிற நிலைமைக்கு வரும். யாராவது குடிக்க போகும்போது குடத்துக்குள்ள கைய விட்டு கலக்கிடுவோம். கைலதேங்கி இருக்குற அழுக்கெல்லாம் கரைஞ்சு மறுபடியும் தண்ணி பழைய கலராயிடும். இதுக்கே பயங்கர சண்டை நடக்கும்.

எல்லாரும் தண்ணி எடுத்துட்டு போற அழகே அழகுதான். தலையில ஒரு பானை அல்லது குடம் இருக்கும்(பிளாஸ்டிக் குடம் இல்லை. எவர்சில்வர் குடம். வெறும் பானையே கொஞ்சம் வெயிட்டாத்தான் இருக்கும்.. ஏன்னா.. நாங்க திருடிட்டு போய்  எடைக்கு போடும்போது தெரிஞ்சிகிட்டோம்! )  இடுப்புல அல்லது கையில் ஒரு குடம். அங்க வச்சிட்டு வந்தாதான் நாங்க தூக்கிட்டு  போயிருவோம்னு பயம்தான்! 

அப்புறம் கொஞ்ச நாள் ஆனதும் சைக்கிள் வாங்கி கொடுத்தாங்க. பிறகு நான் சைக்கிள்ள அடகு வச்சிட்டு போயி தண்ணி அடிச்சிட்டு வருவேன். பின்னாடி உள்ள கேரியல மட்டும் கலட்டி வித்து ரெண்டு  குவாட்டராவது   அடிச்சிருவேன். சில பேர் சைக்கிள் ட்யூபை மட்டும் கலட்டி வித்து  மூணு  குவாட்டர்  கூட ஒரே நேரத்துல அடிப்பாங்க. அதுக்கும் போட்டிதான். யார் அதிகமா அடிக்கிறாங்கன்னு. சில நேரம் அடுத்தவன் குவாட்டரை  எட்டி உதைச்சு சண்டையான கதையும் உண்டு. 

 

அப்புறம் கூவம் கரைதான் பொழுதுபோற இடம். அங்க நைட்டாகிட்டா பலான பலான மேட்டருங்க நடக்கும். எல்லாத்தையும் சிகரெட்ட பத்த வெச்சு அந்த வெளிச்சத்துலயே திருட்டுத்தனமா பார்ப்போம். அங்க மீந்து போன சாராயம், கஞ்சா, சுண்டக்கஞ்சின்னு கெடைகும். ஆள் இல்லாத நேரமா பாத்து எடுத்து அடிப்போம்.  அங்க குட்டைக்கு பக்கத்துல உடைச்சு கிடக்குற பிளேடு வச்சிதான் முடிவெட்டுறது,ஷேவிங் பண்றது எல்லாம் நாங்களே மாத்தி மாத்தி பண்ணிக்குவோம்.
மழை காலத்தில்தான் கூவத்தில் தண்ணி அதிகமாக வரும். குப்பத்தில் உள்ள எல்லோரும் அழுக்கு துணிகளை எடுத்துட்டு(அதோட பிஞ்ச பாய்,கிழிஞ்ச பெட்ஷீட் எல்லாம்) கூவத்துக்கு துவைச்சு குளிக்க கிளம்பிடுவாங்க. நாங்களும் நீச்சல் அடிக்க போறோம்ன்னு சொல்லி அங்க போயி தண்ணில விளையாண்டு அங்க குளிக்கிற பொண்ணுங்கள்ட்ட வம்பு பண்ணி  சிலநேரம் செருப்படி வாங்கிருக்கோம். 

 
என்னா அடி..... போயிட்டாளுங்களா...?


டிஸ்கி - பார்த்தீங்களா மக்களே? நான் ஒன்னும் அந்த டுபாக்கூர் சிரிப்பு போலிஸ் மாதிரி இன்னைக்கு இந்தியாவுல புதன் கிழமை போய் வேலைய பாருங்கன்னு சொல்ல மாட்டேன்! உங்கள் திருப்தியே எனது மாமூல்.. ச்சே.. எனது சேவை!

நன்றி ஒரிஜினல் மலரும் நினைவுகள் கம்மாய்